அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) தீர்ப்பு அளிக்க உள்ளதால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவில் தொண்டர்கள் இடையே சலசலப்பு நிலவி வருகிறது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அதிமுகவில் ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டார்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில்ல் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை (செப்டம்பர் 2) தீர்ப்பு வழங்கவுள்ளது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு வெளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.