இ.பி.எஸ் தரப்புக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

கடந்த 11-ந் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், இ.பி.எஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 11-ந் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், இ.பி.எஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
மீண்டும் திறக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம்: உள்ளே சென்ற இ.பி.எஸ் தரப்பு ஷாக்

அதிமுக இரட்டை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் இபிஎஸ் தரப்பில் சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை போட்டி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தனித்தியாக தங்களது ஆதரவாளர்களுடன் கட்சியின் ஒற்றை தலைமையை கைப்பற்றும் நோக்கில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கமே இருந்தனர்.

இதனால் கடந்த 11-ந் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், இபிஎஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் பொதுக்குழுவுக்கு செல்லாத ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒபிஎஸ் கட்சி அலுவலகத்தின் உள்ளே செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுபினர். இதற்கு ஒபிஎஸ் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அலுவலக பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் ஒரு சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது

Advertisment
Advertisements

மேலும் அலுவலகம் அமைந்துள்ள தெருவில், கார்கள் உள்ளிட்ட வானங்கள் சேதமடைந்த நிலையில், இந்த மோதலை கருத்தில் கொண்டு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் அதிமுக அலுவலகத்திற்கு வைத்துள்ள சீலை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்கவும், ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Aiadmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: