அதிமுக தலைமை அலுவலக வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தார்.

author-image
WebDesk
New Update
Tamil News,

Tamil news updates

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தார்.

Advertisment

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸின் ‘சட்டவிரோத’ உரிமைக்கு, நீதித்துறை அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக இருக்கும் அதிமுகவின் ஜனநாயகச் செயல்பாட்டிற்கு இந்த உத்தரவு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்று ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து, கட்சியை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரக் கோரி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டவிரோதமாக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறிய பன்னீர்செல்வம், அதற்குப் பதிலாக தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக தனது பணிகளையும் கடமைகளையும் செய்ய, கட்சியின் தலைமையகத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்தக் காரணமும் இல்லை.

Advertisment
Advertisements

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 145வது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பையும், சொத்து வைத்திருப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தகுதிவாய்ந்த சிவில் நீதிமன்ற உரிமைகளையும் உயர் நீதிமன்றம் அபகரித்துள்ளதாக ஓபிஎஸ் கூறினார்.

ஜூலை 11ஆம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகம் பழனிசாமி வசம் இருப்பதாக தவறான முடிவுக்கு உயர் நீதிமன்றம் வந்துள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில், கட்சித் தலைமையகத்தில் இபிஎஸ் இல்லை என்பதுதான் உண்மை.

கட்சியின் சட்டப்படி, கட்சியின் அலுவலகம், கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், சட்ட நடவடிக்கைகளில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் உள்ளன என்பதை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவறான ஒன்றாகும் என்று ஓபிஎஸ் தனது மனுவில் கூறினார்.

இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Aiadmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: