ரஜினிகாந்த ரசிகர்கள் 500 பேருக்கு 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வாங்கிக் கொடுத்து மதுரை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அ.தி.மு.க-வின் கடம்பூர் ராஜூ.
ரஜினிகாந்த ரசிகர்கள் 500 பேருக்கு 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வாங்கிக் கொடுத்து மதுரை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அ.தி.மு.க-வின் கடம்பூர் ராஜூ.
அ.தி.மு.க மாநாட்டில் பங்கேற்க ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கடம்பூர் ராஜூ.
மதுரையில் வரும் 20-ம் தேதி அ.தி.மு.க மாநாடு நடைபெற உள்ளது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாநாட்டு அழைப்பிதழ்களை பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் வழங்கி வருகிறார்கள்.
Advertisment
அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை வலையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநாட்டு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி பகுதிகளில் வழங்கி, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அவ்வகையில், அ.தி.மு.க மாநாட்டில் பங்கேற்க ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கடம்பூர் ராஜூ. மேலும், ரஜினிகாந்த ரசிகர்கள் 500 பேருக்கு 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வாங்கிக் கொடுத்து கடம்பூர் ராஜூ மதுரை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் இன்று 'ஜெயிலர்' திரைப்படத்தின் காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்த அவர், படம் பார்க்க வரும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக 'டிக்கெட்' வழங்கினார். ஜெயிலர் படத்திற்கு இலவசமாக டிக்கெட் என்ற செய்தி அறிந்த ஏராளமானோர் படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்தனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் என போக்கு காட்டி வந்த நடிகர் ரஜினி தற்போது அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ, ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டுக்கு அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வசூலை குவிக்கும் ஜெயிலர்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் கடந்த 10 ஆம் தேதி திரையரகுங்களில் வெளியாகியது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘ஜெயிலர்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள இப்படம் வசூலை குவித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil