Advertisment

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி

AIADMK MLAs Disqualification case verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சட்டமன்றம் செல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk mla disqualification case

aiadmk mla disqualification case

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி!

Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 14) தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பில், ‘சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது’ என அறிவித்தார். எனவே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்பதாக அவரது உத்தரவு அமைந்தது.

நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், ‘சபாநாயகர் உத்தரவு அரசியல் அமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது’ என கூறினார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் பழைய நிலையிலேயே நீடிக்கிறது.

இனி 3-வதாக ஒரு நீதிபதி நியமனம் செய்யப்பட்டு, அவர் மூலமாக இந்த வழக்கு விசாரிக்கப்படும். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த வழக்கில் தீர்ப்பு கூறியிருப்பதால், 3-வது நீதிபதியை நியமிக்கும் பொறுப்பு சென்னை உயர் நீதிமன்ற சீனியாரிட்டியில் 2-வது இடம் வகிக்கும் நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் வசம் செல்கிறது. அவரே 3-வது நீதிபதியை தீர்மானிப்பார்.

3-வது நீதிபதி நியமனம் எப்போது? என்பது குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. எனினும் 3-வது நீதிபதி உடனடியாக நியமனம் செய்யப்பட்டால், அடுத்த சில மாதங்களில் தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக வெற்றியாக கருதப்படுகிறது. சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வந்திருந்தால், உடனடியாக சபாநாயகர் மீது தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வர திமுக.வும், டிடிவி தினகரன் தரப்பும் முடிவு செய்திருந்தன. சபாநாயகரை மாற்றிவிட்டு, அதன்பிறகு ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் திட்டம் வைத்திருந்தனர்.

அதேசமயம், சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வந்தால், மேல் முறையீடு செய்யாமல் 18 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்கும் முடிவை டிடிவி தினகரன் எடுக்கவிருந்தார். அதன் மூலமாக 18 தொகுதிகளிலும் திமுக அல்லது அமமுக ஜெயித்தால், எடப்பாடி அரசு தானாகவே மெஜாரிட்டியை இழக்கும் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது.

ஆனால் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் மாறுபட்ட தீர்ப்பாக வந்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பிளஸ்! அதாவது, உடனடியாக நம்பிக்கை இல்லாத் தீர்மான ஆபத்தும் இல்லை. இடைத் தேர்தலை சந்திக்கும் சூழலும் ஏற்படவில்லை. எனவே 3-வது நீதிபதி தீர்ப்பு வரும்வரை பிரச்னை இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சித் தேரை செலுத்த முடியும்.

அடுத்த சில மாதங்கள் அவகாசத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மற்றும் கட்சி ரீதியாக தன்னை இன்னும் வலுப்படுத்திக் கொள்ளவும் முடியும். எனவே இது அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி!

தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை குறிப்பிட்டு கட்சியினருக்கு நம்பிக்கை ஊட்டி வந்த திமுக.வுக்கு இந்தத் தீர்ப்பு ஏமாற்றமே! அதேபோல டிடிவி தினகரன் தரப்புக்கு இந்தத் தீர்ப்பு இன்னும் விரக்தியை கூட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தவும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாசிட்டிவான அம்சமே!

 

 

Chennai High Court Edappadi K Palaniswami Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment