1972 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கிய நாளான அக்டோபர் 17-ம் தேதி, அ.தி.மு.க. 51வது ஆண்டு விழாவை அக்கட்சி பிளவுபட்டு தனித் தனியாகக் கொண்டாடுகிறது.
அ.தி.மு.க-வும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா எப்பொழுதும் பெருமையாகக் கருதும் 1.5 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சியில், எந்த ஒரு சமாதானமும் இல்லாமல், கட்சித் தலைமைக்காக ஒரு முரட்டுத்தனமான போட்டியைக் கண்டுவருகிறது.
அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமையை வலியுறுத்தும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், இந்த திட்டத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் பிடிவாதமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், அடுத்த வாரம் நடைபெறும் சுருக்கமான சட்டசபை கூட்டத்தொடரில், அ.தி.மு.க-வின் இரு அணிகளின் தலைவர்களாக கலந்து கொள்கின்றனர்.
இதில் மிகவும் வித்தியாசமாக, இருவரும் தங்கள் குழுக்களை அங்கீகரிக்க சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போதைய இருக்கை ஒதுக்கீட்டின்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை இருக்கைகளை எதிர்கொள்ளும் வகையில், முதல் வரிசையில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக அமரும் வகையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கிய நாளான அக்டோபர் 17-ம் தேதி, அ.தி.மு.க. 51வது ஆண்டு விழாவை அக்கட்சி பிளவுபட்டு தனித் தனியாகக் கொண்டாடுகிறது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை என முன்னாள் அமைச்சரும், பழனிசாமியின் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி, பன்னீர்செல்வம் மீது சாடினார். “கட்சியில் ஒற்றைத் தலைமையை ஏற்பதற்குப் பதிலாக, பன்னீர்செல்வம் எல்லாவிதமான யுக்திகளையும் கையாண்டு அ.தி.மு.க-வின் இமேஜைக் கெடுத்து, கட்சியை நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டார்” என்று அவர் கூறினார்.
மேலும், ஓ. பன்னீர்செல்வம் எந்த தியாகமும் செய்யாமல் கட்சியில் பல உயர் பதவிகளை அனுபவித்தார். அவர் இப்போது எல்லா வகையிலும் வசதியாக இருக்கிறார்” என்று கெ.பி. முனுசாமி குற்றம் சாட்டினார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபட்டது. அப்போது, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவு அளித்தாலும், ஜானகி ராமச்சந்திரன், கட்சியை பாதுகாக்க, தன் கணவர் உருவாக்கிய அ.தி.மு.க.,வை, 'புரட்சித் தலைவி' ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார் என்று கே.பி. முனுசாமி கூறினார்.
“சில சூழ்நிலைகளால் பன்னீர்செல்வம் முதல் இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க.வால் தான் அந்தஸ்து உயர்ந்து அடையாளம் கிடைத்தது என்பதை உணர்ந்து, அவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். மாறாக அவர் தனது சுயநல நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்” என்று கே.பி. முனுசாமி குற்றம் சாட்டினார்.
ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர், சமீபத்தில், இ.பி.எஸ் அணியில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்தால், அந்த ஊழல் ரகசியத்தை வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
தமிழகத்தில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வளர அ.தி.மு.க-வில் உள்ள கோஷ்டி பூசல்தான் ஆளும் தி.மு.க-வை எதிர்த்துப் போராடுவதற்கு வாய்ப்பளிக்கிறது என்பதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க மாநில சட்டப் பிரிவு இணைச் செயலாளருமான ஆர்.எம். பாபு முருகவேல் மறுத்துள்ளார்.
“தமிழகத்தில் பா.ஜ.க பலமான சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளது. ஆனால், இதற்கு நாங்கள் அழுத்தப்படுகிறோம் என்று அர்த்தப்படுத்துவதில்லை. எந்த கட்சியும் எங்களுக்கு பதிலாக முடியாது. மாநிலத்தில் இன்னும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று ஆட்சி அமைப்பது நிச்சயம் என்று கூறிய பாபு முருகவேல், அ.தி.மு.க-வின் நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் காற்றில் காணாமல் போய்விடுவார்கள் என்ற பழனிசாமி கூறியதை நினைவு கூர்ந்தார்.
ஆனால், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறுகையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என்ன செய்து வருகிறதோ அதை விட, தனது கட்சி மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்துக்கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறது என்று கூறினார்.
மேலும், “பழனிசாமியோ அவரது அதிமுகவோ எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று நான் கூறவில்லை. அ.தி.மு.க.வை விட பா.ஜ.க ஆற்றல் மிக்க எதிர்க்கட்சியாக செயல்படுகிறது” என்று கரு. நாகராஜன் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"