/indian-express-tamil/media/media_files/gxDQddIMqjrOzCC4San7.jpg)
பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
AIADMK | R B Udhaya Kumar | O Panneerselvam: பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று திங்கள்கிழமை தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஒரே ஒரு சீட்டுக்காக போராடுகிறார் என்றும், அவரை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
"3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஒரே ஒரு சீட்டுக்காக போராடுகிறார். தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை முன்னாள் முதல்வர்கள் யாருக்குமே ஏற்படவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் மவுன சாமியாராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது" என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.