ஒரே ஒரு சீட்டுக்காக போராடும் ஓ.பி.எஸ்: ஆர்.பி. உதயகுமார் தாக்கு

ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஒரே ஒரு சீட்டுக்காக போராடுகிறார் என்றும், அவரை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AIADMK R B Udhaya Kumar about O Panneerselvam Tamil News

பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

AIADMK | R B Udhaya Kumar | O Panneerselvam: பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று திங்கள்கிழமை தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

Advertisment

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஒரே ஒரு சீட்டுக்காக போராடுகிறார் என்றும், அவரை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

"3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஒரே ஒரு சீட்டுக்காக போராடுகிறார். தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை முன்னாள் முதல்வர்கள் யாருக்குமே ஏற்படவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் மவுன சாமியாராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது" என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements

 

O Panneerselvam R B Udhaya Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: