த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையா? விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

த.வெ.க. கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி. கூட்டணி குறித்து நாங்க இதுவரை த.வெ.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதைப் போலதான் த.வெ.க.வும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று விளக்கமளித்தார்.

த.வெ.க. கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி. கூட்டணி குறித்து நாங்க இதுவரை த.வெ.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதைப் போலதான் த.வெ.க.வும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று விளக்கமளித்தார்.

author-image
WebDesk
New Update
eps tvk

த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையா? விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒருபக்கம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்டது. அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணி வைக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

Advertisment

அதற்கு முக்கியமான காரணமே, எடப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது நாமக்கல் கூட்டத்தில் த.வெ.க. கொடிகள் பறந்ததைப் பார்த்து, பழனிச்சாமி “அங்க பாருங்க கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க..” என்று கூறி தொண்டர்களை குஷிபடுத்தினார். இந்தப் பேச்சு, த.வெ.க. உடனான சாத்தியமான கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. அதில் இருந்து த.வெ.க -அ.தி.மு.க கூட்டணியா என்கிற கேள்விகள் தான் அரசியல் வட்டாரத்தில் எழுந்து கொண்டு இருக்கிறது.

இப்படியான சூழலில், இன்று முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, தேவரின் சமூகப் போராட்டங்களை நினைவுகூர்ந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் பிரசார கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் பங்கேற்றது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டபோது பதில் அளித்தார்.

இதுகுறித்து பேசிய அவர் ” 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து நாங்க இதுவரை த.வெ.க உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதைப்போல தான் த.வெ.க.வும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அ.தி.மு.க கூட்டத்தில் த.வெ.க. கொடி குறித்து, வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் தங்கள் ஊருக்கு வந்த என்னை த.வெ.க. தொண்டர்கள் வரவேற்றுள்ளனர் என்று அவர் பதில் அளித்தார்.

Advertisment
Advertisements
Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: