/indian-express-tamil/media/media_files/lr4ZEWmey709oZDJr78z.jpg)
அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
Aiadmk | edappadi-k-palaniswami: அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அ.இ.அ.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19 (7) மற்றும் 25 (2)-ன்படி, வருகின்ற (26.12.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.