வரும் 26ம் தேதி அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: இ.பி.எஸ் அறிவிப்பு

வருகிற 26ம் தேதி சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வருகிற 26ம் தேதி சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami

அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

Aiadmk | edappadi-k-palaniswami: அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக அ.இ.அ.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:- 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19 (7) மற்றும் 25 (2)-ன்படி, வருகின்ற (26.12.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

Advertisment
Advertisements

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: