பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் இன்று முதல் ஏ.சி மின்சார ரயில் சேவை தொடக்கம்

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sa

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் குளிர்சாதன வசதி இல்லாத மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

Advertisment

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ரயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தமிழகத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது அதனுடன் சேர்த்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது தொடக்க விழா நடத்தப்படவில்லை.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரயில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது என்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை சென்னையில் தொடங்கி உள்ளது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித் தடத்தில் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் 29 கிமீ பயணத்திற்கு ரூ.95 ஆகவும், 9 கிமீக்கு ரூ.35 ஆகவும், 24 கிமீக்கு ரூ.70 ஆகவும், 34 கிமீக்கு ரூ.95 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ஏசி ரயில், காலை 8.35-க்கு செங்கல்பட்டு சென்றடையும். 

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: