ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்கம் - முதற்கட்ட பணிகளுக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசிடம் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பான ஆவணங்கள் ஆரம்பகட்ட ஆய்வில் இருப்பதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசிடம் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பான ஆவணங்கள் ஆரம்பகட்ட ஆய்வில் இருப்பதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai metro train

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, நிலம் கையகப்படுத்துதல், பூமிக்கு அடியில் செல்லும் கம்பிகள், குழாய்கள் மற்றும் மின்சார கேபிள்களை மாற்றுதல் போன்ற பல முதற்கட்ட பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

Advertisment

ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.1,816 கோடி நிலம் கையகப்படுத்துதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.112.50 கோடி சாலைப் பணிகள், நிலப்பரப்பு ஆய்வு, புவியியல் ஆய்வு, தடுப்புகள் அமைத்தல், மரங்களை வெட்டி மீண்டும் நடுதல், வழிகாட்டிகள் அமைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும். இந்தத் தொகை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு (CMRL) துணைக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் இந்த நீட்டிப்புத் திட்டம், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 15.46 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. ஆகஸ்ட் 2024-இல், செலவைக் குறைக்கவும், கட்டமைப்பின் உயரத்தை குறைக்கவும் CMRL இரண்டு அடுக்கு வடிவமைப்பை இறுதி செய்தது. கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கான இந்த நீட்டிப்புக்கு, மத்திய அரசின் பங்கு நிதிக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் ஜி.ஐ.எஸ் நிபுணரும், போக்குவரத்து ஆர்வலருமான தயானந்த் கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவுக்கு, ஆகஸ்ட் 27 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அளித்த பதிலில், விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆரம்பகட்ட பரிசீலனையில் இருப்பதாகவும், இது தொடர்பாக இதுவரை எந்த கூட்டங்களும் நடத்தப்பட்டதற்கான பதிவுகள் இல்லை என்றும் கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதம், கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. நீளமுள்ள மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மாநில அரசு ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

Chennai Metro Metro

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: