கோவை விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.57 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.57 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Cbe airport.jpg

சார்ஜாவில் இருந்து நேற்று கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். 

Advertisment

அப்போது திருவாரூர் பகுதியை சேர்ந்த தீபா(28) மற்றும் கடலூரை சேர்ந்த மணிகண்டன்(28) ஆகிய இரண்டு பயணிகள் உள்ளாடை மற்றும் வயிற்று பகுதிக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.  

Cbe airport gold.jpg

இதனை அடுத்து அவர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மதிப்பு 1.57 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி: பி. ரஹ்மான்

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: