மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தமான நீதிபதி விசாரனையில் சாட்சிகள் ஆஜரான நிலையில், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் சம்பந்தமான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், சக ஊழியர் பிரவீன்குமார் அறநிலையத்துறை ஊழியர் சக்தீஸ்வரன் ஆகியோர் அஜித்குமார் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா ஆகியோர் சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி அறிவொளி முன் விசாரனைக்கு ஆஜரானார்கள்.
இதையடுத்து, அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தமான நீதிபதி விசாரனையில் சாட்சிகள் ஆஜரான நிலையில், சாட்சிகளுக்கு அனைத்து பாதுகாப்பும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.