Advertisment

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 32,000 மாணவர்களுக்கு காலை உணவை வழங்குவதற்காக, அட்சய பாத்ரா அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஈடுபடுத்த அதிமுக அரசு எடுத்துள்ள முடிவால் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க நண்பகல் உணவு திட்டமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu, tamil nadu noon meal scheme, aiadmk, சென்னை மாநகராட்சி பள்ளி காலை உணவு, அட்சய பாத்ரா, பூண்டு வெங்காயம் இல்லாத உணவு, akshaya patra foundation, akshaya patra food, iskcon, Tamil indian express

tamil nadu, tamil nadu noon meal scheme, aiadmk, சென்னை மாநகராட்சி பள்ளி காலை உணவு, அட்சய பாத்ரா, பூண்டு வெங்காயம் இல்லாத உணவு, akshaya patra foundation, akshaya patra food, iskcon, Tamil indian express

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 32,000 மாணவர்களுக்கு காலை உணவை வழங்குவதற்காக, அட்சய பாத்ரா அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஈடுபடுத்த அதிமுக அரசு எடுத்துள்ள முடிவால் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க நண்பகல் உணவு திட்டமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Advertisment

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் சிந்தனையில் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்திற்கு ஆளுநரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட சமையலறைகளை அமைப்பதற்காக என்.ஜி.ஓ.க்கு சென்னையில் உள்ள பிரதான இடங்களில் மாநகராட்சி நிலம் ஒதுக்கியுள்ளது.

அட்சய பாத்ரா அறக்கட்டளை பெங்களூரு, கிருஷ்ண உணர்வு சர்வதேச சங்கத்தின் (இஸ்கான்) முன்முயற்சியாக பூண்டு, வெங்காயம் மற்றும் முட்டை இல்லாத அதன் உணவு திட்டம் எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்களிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் நண்பகல் உணவுத் திட்டம் பல தசாப்தங்களாக அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவை வழங்குவதற்கான முதல் முயற்சி இதுவாகும்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், “ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட தற்போதைய திட்டம், குழந்தைகள் வெறும் வயிற்றில் காலை வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்” என்றார். இது ஆளுநரின் நிதி மற்றும் கார்ப்பரேஷன் நிலங்களைத் தவிர்த்து எந்தவொரு அரசாங்க உதவியையும் உள்ளடக்காது என்று அவர் கூறினார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைக்கப்படும் சமையலறை வசதி “நகரத்தின் 35 மாநகராட்சி பள்ளிகளில் 12,000 குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சத்தான மற்றும் ஆடம்பரமான காலை உணவை வழங்கும்” என்று அட்சய பாத்ராவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, வெங்காயம், பூண்டு மற்றும் முட்டைகளைத் தவிர்க்கும் திட்டங்களுக்கான இஸ்கானின் உணவை சுட்டிக்காட்டி, “தமிழ்நாட்டில், மாணவர்களுக்கு சத்தான உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக முட்டை வழங்கப்படுகிறது. இப்போது இஸ்கான் சைவ உணவை சாப்பிட அவர்களை கட்டாயப்படுத்துகிறது. வளர்ந்த நாடுகள் கூட மாணவர்களுக்கு இறைச்சியை வழங்குகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக அரசு இந்துத்துவா குழுவிடம் மதிப்புமிக்க திட்டத்தை ஒப்படைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய வைகோ, தமிழகத்தின் காலை உணவுத் திட்டம் இப்போது மனு தர்ம உணவுத் திட்டமாக மாறுகிறது என்று விமர்சித்தார்.

எதிர்க்கட்சி திமுக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்க உள்கட்டமைப்பு மற்றும் வளங்களைக் கொண்டிருக்கும் போது உணவு பாசிசத்திற்காக அறியப்பட்ட ஒரு அமைப்பு ஈடுபடுவதற்கான நடவடிக்கையை விமர்சித்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நீதிபதி கே. சந்த்ரு, மாநிலத்தின் மதிய உணவு திட்டத்தை விரிவாக ஆராய்ந்து, இது தொடர்பாக பல தீர்ப்புகளை வழங்கியவர். இது குறித்து சந்த்ரு கூறுகையில், “இதுபோன்ற ஒரு திட்டத்திற்காக ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒத்துழைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை தற்கொலைக்குச் சமமானது” என்று கூறினார். மேலும், “அரசாங்கம் முதன்மையாக ஒரு சமூக நீதித் திட்டத்தை கை கழுவுகிறது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் அவர்களுக்கு முக்கியமான இடத்தில் நிலத்தை வழங்குவதன் மூலம் அத்தகைய ஒப்பந்தத்தில் நுழைவது என்பது அவர்கள் நாளை அரசாங்கத்தை அச்சுறுத்தும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதைத் தவிர வேறில்லை.” என்றார்.

90 சதவிகித மக்கள் அசைவ உணவை உண்ணும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், பூண்டு, வெங்காயம் மற்றும் முட்டைகளை நிராகரிப்பதன் மூலம் அவர்களின் உணவு பிரச்சாரத்திற்காக குற்றம்சாட்டப்படும் ஒரு ஈடுபடுவதது என்பது எந்த தர்க்கமும் இல்லை என்று நீதிபதி சந்திரு கூறினார்.

மாற்று வளர்ச்சிகள் நிறுவனங்களின் மூத்த உணவு நிபுணர் ஜே.ஜெயரஞ்சன், அட்சய பாத்ரா போன்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஈடுபடுவது என்பது தமிழகத்தின் நீண்ட பாரம்பரியமிக்க முன்னோடியாக விளங்கும் வெற்றிகரமான நண்பகல் உணவு திட்டத்தை நடத்துவதை கேலி செய்வதாக உள்ளது. “மதிய உணவு நிதி திட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கோடியை மத்திய அரசு குறைத்த நேரத்தில் ஆளுநர் இந்த பணத்தை கொடுத்துள்ளார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று ஜெயரஞ்சன் கூறினார்.

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment