scorecardresearch

ஆலந்தூர் மெட்ரோ வாகன நிறுத்துமிடம் 3 மாதங்களுக்கு மூடப்படும்: சி.எம்.ஆர்.எல்., அறிவிப்பு

கார் நிறுத்துமிடம் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும், பயணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தின் பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்தலாம்.

ஆலந்தூர் மெட்ரோ வாகன நிறுத்துமிடம் 3 மாதங்களுக்கு மூடப்படும்: சி.எம்.ஆர்.எல்., அறிவிப்பு

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை பயணிகள் வசதிக்காகவும், பார்க்கிங் வசதிக்காகவும் புதுப்பிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) செய்திக் குறிப்பு வெளியிட்டது.

கார் நிறுத்துமிடம் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும், பயணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தின் பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்தலாம்.

இதைப்பற்றி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது.

இதனால், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24, 2023 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது.

இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகன பயன்பாட்டாளர்கள் தற்காலிகமாக வாகன நிறுத்த இயலாததற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது”, என்று செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Alandur metro parking lot changed for 3 months