pollachi : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மதுவிருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக கேரள மாணவர்கள் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
150க்குள் மேற்பட்ட கேரள மாணவர்கள், தமிழகத்தில் சுற்றுலாவிற்கு வந்தனர். பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் கணேஷ் என்பவரின் தோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளையில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
பொதுமக்களின் புகாரையடுத்து, கோவை எஸ்.பி. சுஜித் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரகளையில் ஈடுபட்டதாக கூறி159 கேரள மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.