/tamil-ie/media/media_files/uploads/2023/03/sho-1.jpg)
கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக இதை செய்திருக்க கூடாது என்று அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “ ஒன்றரை ஆண்டுகள் பலமுறை சிந்தித்து கட்சியிலிருந்து விலகுகிறேன். சொந்த கட்சி நீர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒட்டு கேட்பதை ஒரு அபத்தமான செயல்” என்று கூறியிருந்தார். மேலும் அண்ணாலை மீது காட்டமான விமர்சனத்தையும் முன்வைத்தார்.
இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகு அவர் நேற்று எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது. இந்நிலையில் இது தொடர்பாக அமர்பிரசாத் ரெட்டி ட்வீட் செய்துள்ளார். “கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக இதை செய்திருக்க கூடாது” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து அவர் பகிர்ந்த ட்வீட்டி, “ தமிழ்நாட்டின் எதிர்காலம் பாஜக-தான் . அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக ஆட்சியமைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரோடு தேர்தலில் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை சுட்டிகாட்டிய அமர்பிரசாத் ரெட்டி, கோட்டையை கைப்பற்றுவதை மறந்துவிட வேண்டியதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.