சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுள்ளளார்.
அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“