/indian-express-tamil/media/media_files/2024/12/19/5SbVxbTvJqdtTQnCOTEL.jpg)
அம்பேத்கர்னா ஃபயர் - அன்பில் மகேஸ்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அன்பில் மகேஸ் அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித்ஷா பேசியதை விமர்சித்தார்.
அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேசனாகி விட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். அது பேசுபொருளாகி பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். “அம்பேத்கர்னா ஃபிளவர் இல்லடா ஃபயர்” என புஷ்பா படத்தில் வரும் வசத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
மேலும், “அம்பேத்கர் என்றால் ஃபயர், அதனால் தான் அம்பேத்கர் விவகாரம் நாடு முழுவதும் ஃபயராகி கொண்டிருக்கிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.