/indian-express-tamil/media/media_files/kqqHbOhWpwJToHKVkUuj.jpg)
கடலூரில் அம்பேதகர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற மர்ம நபர்கள்; போலீசார் தீவிர விசாரணை
கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலை உள்ளது. இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் அம்பத்கேர் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. சத்தம் கேட்டு அம்பலவாணன் பேட்டை கிராம பொது மக்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது இளைஞர்கள் சிலர் டூ வீலரில் கத்திக்கொண்டு விரைந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, அம்பலவாணன் பேட்டை பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.