ஆம்பூரில், கோயில் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பூசாரி மீது சாமி வந்து, “ இந்த இடம் தனக்கு சொந்தம்” என்று கூறியதால் பரபரப்பு.
ஆம்பூர் அடுத்த வடகரையில், 40 வருடங்களுக்கு முன்பு, மண்ணில் கிடைத்த அம்மன் சிலையை வைத்து, கிராம மக்கள் கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். கோவில் அமைந்துள்ள இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி கட்டடம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இந்நிலையில் இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வருவாய் துறை அதிகாரிகள், கோவிலை இடிக்க முயன்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வாகனத்தை மறுத்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் யுவராணி அம்மனே வந்து சொல்லட்டும் நாங்கள் பணியை நிறுத்திவிடுகிறோம் என்று கோவத்தில் கிராம மக்களிடம் கூறினார். இந்நிலையில், கோவில் பூசாரிக்கு சாமி வந்தது ‘இங்கேதான் குடியிருக்க விரும்புகிறேன். என்னை யாரும் அப்புறப்படுத்த வேண்டாம்” என்று கூறினார். இந்நிலையில் கோயிலை இடிக்கும் பணியை அதிகாரிகள் நிறுத்திவிட்டு சென்றனர்.