/tamil-ie/media/media_files/uploads/2022/12/Home-Made-Grape-Wine011.jpg)
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் பல அறிவிப்புகளை தமிழக அரசு திங்கள்கிழமை அவையில் தாக்கல் செய்தது.
தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ல் திருத்தங்கள் உட்பட உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் பல அறிவிப்புகளை தமிழக அரசு திங்கள்கிழமை அவையில் தாக்கல் செய்தது.
முன்னதாக, அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ல் திருத்தம் செய்து, தேசிய அளவில் விருந்தினர்களுக்கு மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்கும் சிறப்பு உரிமம் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசின் முடிவை எதிர்த்து, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் மன்றத்தைச் சேர்ந்த கே.பாலு என்பவர் வழக்கு தாக்கல் செய்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ்நாடு அரசின் மதுபான விதிகள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஜி தெரிவித்துள்ளார்.
மாநாட்டு அரங்குகள் மற்றும் அரங்கங்களில் நடைபெறும் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் போது விருந்தினர்களுக்கு மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்கும் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பான திருத்தங்கள் இதில் உள்ளன.
முன்னதாக, மாநாட்டுக் கூடங்கள், திருமண அரங்கங்கள், கருத்தரங்க அரங்கம், விருந்து அரங்கம் ஆகியவற்றில் மதுபானங்களை விநியோகிக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.