/indian-express-tamil/media/media_files/DUJXXH9IewEF3YVBme9D.jpg)
தமிழக எம்.பி-க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தனர்.
Amit Shah | Tr Baalu:மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முடிவு செய்தனர்.
அதன்படி, தமிழக எம்.பி-க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தனர். தி.மு.க-வின் டிஆர் பாலு , காங்கிரஸ் கட்சி ஜெயக்குமார், ம.தி.மு.க-வின் வைகோ , முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி , மார்க்சிஸ்ட் கட்சியின் நடராஜன் , வி.சி.க கட்சியின் ரவிக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
டி.ஆர்.பாலு பேச்சு
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு தமிழக எம்.பி-க்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தொடர்பாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், "தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தினோம். மேலும் சுமார் 37,000 கோடியை மத்திய அரசு உடனடியாக தருமாறு, கோரிக்கை வைத்தோம். 27ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்" என்று கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.