மக்களவைத் தேர்தலையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று (04.04.2024) தமிழகம் வருகிறார் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இன்று இரவு தமிழகம் வருகிறார் என அறிவிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜ.க வேட்பாளர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9-ம் தேதி முதல் 4 நாள் சுற்றுப் பயண பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்படது. மிகப் பிரமாண்ட்ட ரோட் ஷோக்களிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை 2 முறை அறிவிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது பா.ஜ.க-வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் (04.04.2024) நாளையும் (05.04.202) மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (04.04.2024) இரவு மதுரை வருவதாகவும், நாளை (05.04.2024) தென்காசி, கன்னியாகுமரி செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விரைவிலேயே இந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டது.
அதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (04.04.2024) மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் பா.ஜ.க பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி தென்காசி, கன்னியாகுமரியில் பா.ஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அமித்ஷாவின் வருகை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்ச அமித்ஷா வருகையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று (04.04.2024) இரவு தனி விமானம் மூலம் மதுரை வருவதாகவும், நாளை காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி சென்று 'ரோட் ஷோ' நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த சுற்றுப்பயண திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷாவின் வருகை தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.