/tamil-ie/media/media_files/uploads/2023/07/Express-Image-5.jpg)
மூன்று வேளையும் குறைந்த விலையில் உணவு வழங்க, ‘அம்மா உணவகம்’ என்னும் திட்டத்தை 2013- ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, அம்மா உணவகம் சென்னை மாநகராட்சியில் தனியார் விடுதிகளில் முறையாக அனுமதியுடன் செயல்படுகிறதா, வரிகள் செலுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தணிக்கைக்குழு தலைவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், "அம்மா உணவகத்தின் வருவாயைவிட ரூ.8 கோடி அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக", கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.