/indian-express-tamil/media/media_files/ZxBxQ88GHYUmvaeN4aXa.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி சென்னை அயனாவரத்தில் அவரது வீட்டின் முன்பாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். பலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பலருடைய பெயர்கள் ஊடகங்களில் பேசப்படுகிறது. பல திருப்பங்களை அடைந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் மற்றும் சம்போ செந்திலுடன் அடிக்கடி போனில் பேசியதாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவியிடம் (மோனிஷா) சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கு வழக்கு ஒன்றிற்காக வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், செந்திலுடன் செல்போனில் பேசியதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, போலீசார் இயக்குநரிடமும் (நெல்சன்) விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.