செப்.25ம் தேதி கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி; தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு - அமுதா ஐ.ஏ.எஸ்

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்று தமிழ்நாடு அரசு செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்று தமிழ்நாடு அரசு செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Amudha IAS press meet 2

இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகயும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி செப்டம்பர் 25-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளார் என்று தமிழ்நாடு அரசு செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.

Advertisment

மேலும், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகயும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ். சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது” என்று கூறினார்.

“நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த நிகழ்த்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்கிறார்” என்று அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

மேலும், “நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மூலமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.” என்று அமுதா ஐ.ஏ.எஸ் கூறினார்.

Tamil Nadu Government

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: