Advertisment

ஒரு மக்களவை தொகுதி அல்லது ஒரு ராஜ்ய சபா சீட்; கமல்ஹாசனுக்கு தி.மு.க.,வின் ஆஃபர்

கமல்ஹாசன் போட்டியிட்டால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்பும் தி.மு.க, ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தில் நிற்க விரும்பும் கமல்ஹாசன்

author-image
WebDesk
New Update
Kamal hassan

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (புகைப்படம்: எக்ஸ் தளம்/ கமல்ஹாசன்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Arun Janardhanan

Advertisment

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க தனது கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும், நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (MNM) ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் அல்லது தேர்தலுக்குப் பிந்தைய ராஜ்யசபா பதவியை ஏற்கலாம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும், கூட்டணிக்காக மாநிலம் முழுவதும் விரிவான பிரச்சாரத்திற்கு ஈடாக இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் படிக்க: An LS seat or an RS berth, DMK’s offer to Kamal Haasan

பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக இரு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளன, மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கமல்ஹாசன் கூட்டணிக்கு வருவார் என்ற ஊகங்களைத் தொடர்ந்து, தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க.,வின் மூத்த தலைவர் ஒருவர், கமல்ஹாசனை கட்சியின் சின்னமான உதய சூரியனில் போட்டியிட தி.மு.க பரிந்துரைப்பதாகக் கூறினார், அது அவரது பாதையை எளிதாக்கும், மேலும் அவருக்கு வழங்கப்படக்கூடிய தொகுதி கோயம்புத்தூராக இருக்கும், அங்கு 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நல்ல வாக்குகளைப் பெற்றது, என்றும் அவர் கூறினார். மேலும், "அவர் போட்டியிட விரும்பவில்லை என்றால், அவருக்கு எங்கள் நட்சத்திர பிரச்சாரகர் என்ற வாய்ப்பு வழங்கப்படும், பின்னர் அவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்படலாம்" என்றும் அந்த தலைவர் கூறினார்.

நீண்ட காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வரும் கமல்ஹாசன், 2018ல் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கினார், சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் சின்னமான டார்ச் லைட்டில் கமல்ஹாசன் போட்டியிட அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க.,வின் வாய்ப்புகளைப் பற்றிய இறுதி முடிவை கமல்ஹாசன் எடுக்க வேண்டும், அவர் போட்டியிட்டால், அது மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்தில் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் ஒருவர் கூறினார். "இந்த தேர்தலில் தி.மு.க.,வுடன் கைகோர்ப்பது ஒரு பெரிய நோக்கத்திற்காக, அதேநேரம் எங்கள் சின்னத்தில் போட்டியிடுவது அவசியம்" என்றும் அந்த தலைவர் கூறினார்.

2019 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் (1.44 லட்சம் வாக்குகள்) மற்றும் தென் சென்னை (1.35 லட்சம் வாக்குகள்) தொகுதிகளில் தனது கட்சியின் சிறப்பான செயல்திறனை தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தைக்கு உதவுவதற்காக கமல்ஹாசன் கையில் வைத்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு, பல முன்னணி தலைவர்கள் வெளியேறுவதை கமல்ஹாசன் பார்த்தார். அவர் முதலில் காங்கிரஸுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டார், ஆனால் 2021 இல் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற முடியவில்லை. 2022 இல் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​அவர் நீண்ட நேரம் பங்கேற்றார். இப்போது, ​​காங்கிரஸின் செல்வாக்கு பெரிய அளவில் புத்துயிர் பெறாத நிலையில், தி.மு.க.வை தனது அதிர்ஷ்டத்தை மீட்டெடுக்க சிறந்த பந்தயமாக கமல்ஹாசன் கருதுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Mnm Kamal Hassan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment