Advertisment

முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளதா? ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில்தான் உள்ளதா? என்பது தொடர்பான ஆவணங்களை தாக்க வருவாய் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
anna arivalayam

முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வருவாய் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் ஆதிதிராவிடர்களுக்கு அளிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சீனிவாசன் தேசிய பழங்குடி ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தேசிய பழங்குடியின ஆணையம் 2019ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதற்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு புதன்கிழமை (ஜன.3,2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என முரசொலி அறக்கட்டளை தரப்பில் வாதிடப்படப்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை தள்ளி வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madras High Court Murasoli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment