/indian-express-tamil/media/media_files/2025/10/18/trichy-2025-10-18-17-02-36.jpeg)
Trichy
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மும்மதங்களைச் சேர்ந்த பெரியோர்களைச் சிறப்பித்ததுடன், 125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளையும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த பெரியோர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அழைத்து, அவர்களுக்குத் தீபாவளிப் பண்டிகைக்கான சிறப்புப் பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
125 பேருக்கு நடமாடும் காய்கறி வண்டி:
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர திமுக செயலாளர் மு. மதிவாணன், கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதி கழகச் செயலாளர் மோகன், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், பயனாளிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.