துவாக்குடி உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அன்பில் மகேஷ் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், முகாமில் மனு அளித்த பொதுமக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கினார்

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், முகாமில் மனு அளித்த பொதுமக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கினார்

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-09-03 at 6.12.05 PM

Trichy

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் மேடு சமுதாய கூடத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Advertisment

பொதுமக்களின் சிரமங்களை தீர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சியில், 18 மற்றும் 19வது வார்டுகளான ராவத்தான்மேடு, சக்தி நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 2000 பேர் பயன்பெறும் வகையில், ராவத்தான்மேடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று இத்திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு நகராட்சி தலைவர் காயம்பூ தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பட்டுசாமி மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உடனடி தீர்வு காணப்பட்டவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

WhatsApp Image 2025-09-03 at 6.12.07 PM

Advertisment
Advertisements

வருவாய்த்துறை மூலம், துவாக்குடி நகராட்சியைச் சேர்ந்த அழகம்மாள், ஸ்ரீரங்கம் அம்மாள், இன்னாசி அன்னம்மாள், சுவாமிநாதன், குணசேகர், மற்றும் ஜெகநாதன் ஆகியோருக்கு இலவச நத்தம் பட்டாவினை அமைச்சர் வழங்கினார்.

மேலும், முகாமில் கலந்து கொண்ட மகளிர் உரிமை சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மூலம் தாய்மார்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறதா என்பதையும் அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன், அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த முகாமில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: