அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வாய்ப்பு : அன்பில் மகேஷ்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனை செய்வதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனை செய்வதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனை செய்வதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

காலை சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞசர் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில்  காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள  அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விரிவுப்படுத்தப்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும்  15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் “ அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம். வரும் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது”  என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: