அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனை செய்வதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
காலை சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞசர் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விரிவுப்படுத்தப்பட்டது.
விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் “ அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம். வரும் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“