Advertisment

நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால் இ.பி.எஸ் முதல்வர் பதவியை இழந்திருந்தார் : அன்புமணி ராமதாஸ்

பா.ம.க கட்சி எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் துரோகம் செய்யாது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பா.ம.க கட்சி எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் துரோகம் செய்யாது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ பா.ம.க கட்சி எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் துரோகம் செய்யாது. .அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாறி மாறி உயிர் கொடுத்து வருகிறோம். முக்கியமாக அ.தி.மு.கவிற்கு உயிர் கொடுத்தோம். இ.பி.எஸ்-க்கு நினைவு இருந்தால் 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைக்கு சென்றார்கள்.

 அவர் வெளியே வந்த பிறகு அவர் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற நிலை இருந்தது. அப்போது 1998ல் அவர்களுக்கும் உயிர்கொடுத்தோம் அவரது கட்சிக்கும் உயிர்கொடுத்தோம். 2001 நாங்கள் முதலில் சென்றதால்தான் மற்ற கூட்டணி கட்சிகள் அதன் பிறகு வந்தார்கள். 2009ல் இதே நிலைதான். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால் இ.பி.எஸ் முதல்வர் பதவியை இழந்திருந்தார். ஆனால் எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்று சொல்லி சரியாக கொடுக்கவில்லை. தேர்தல் 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அதற்கு முன்பாக 1 மணிக்குத்தான் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது. மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் இ.பி.எஸ் எங்கே சொன்னார் ?. அவரது கட்சியின் தலைவர்களும் இதை பற்றி பேசவில்லை. உங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் தியாகிகள், வரவில்லை என்றால் நாங்கள் துரோகிகள்” என்று அவர் கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment