Advertisment

நெல்லையில் விளாசல்... தூத்துக்குடியில் விளக்கம்: சென்னை வானிலை ஆய்வு மையம் பற்றி அன்புமணி ராமதாஸ்

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் நெல்லை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்த நிலையில், தூத்துக்குடியில் அது தொடர்பாக புதிய விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss explains his speech on IMD CHENNAI Tamil News

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Anbumani-ramadoss: தென் குமரிக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி தென் மாவட்டங்களை புரட்டப் போட்டது. விடிய விடிய பெய்த அதிகன மழை மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க செய்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. 

Advertisment

இதனால் 2 மாவட்டங்களிலும் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் பேச்சு 

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், "சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம், அது தேவை இல்லை. பரவலாக மழை, கன மழை என்பதெல்லாம் நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரியுமா?. எதற்காக தொழில்நுட்பம் வைத்துள்ளீர்கள்?. 

இந்த வானிலை ஆய்வு மையம் செய்கிற வேலையை 5-ம் வகுப்பு மாணவனாலும் செய்ய முடியும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றுதான் எப்போதும் அறிவிக்கிறது. உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பிருந்த நிலையே தொடருகிறது" என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் குறித்த தனது பேச்சுக்கு அன்புமணி புது விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை. வானிலை ஆய்வு மையம் துல்லியமாகக் கணிக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்.

வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஏன் நமது வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை. இனிவரும் காலங்களில் இன்னும் அதிக மழை, புயல், வெள்ளம் வரும். துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில்தான் மக்கள் தங்களை காத்துக்கொள்ள முடியும்." என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment