Advertisment

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஸ்டாலின் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்; அரிட்டாபட்டியில் அன்புமணி குற்றச்சாட்டு

அரிட்டாப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்களையும் டெல்டா பகுதிகளைப் போல 'சிறப்பு வேளாண் மண்டலம்' மாதிரி 'பாதுகாக்கப்பட்ட உயிரியல் பல்முகத்தன்மை மண்டலமாக' அறிவிக்க வேண்டும் – அரிட்டாப்பட்டியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

author-image
WebDesk
New Update
anbumani aritapatti

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஏமாற்ற முயற்சிக்கிறார் என மதுரை அரிட்டாப்பட்டியில் பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை "ஏமாற்ற முயற்சிக்கிறார்" என்று குற்றம் சாட்டிய பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ், அரிட்டாப்பட்டி கிராமத்தின் முழுமையான 5,000 ஏக்கர் நிலப்பகுதியை 'பாதுகாக்கப்பட்ட உயிரியல் பல்முகத்தன்மை மண்டலம்' என்று அறிவிக்கும் வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

2024 டிசம்பர் 26ஆம் தேதி அரிட்டாப்பட்டி மற்றும் வெள்ளாளப்பட்டி பகுதி மக்களை சந்தித்து உரையாற்றிய டாக்டர் அன்புமணி, டங்ஸ்டன் சுரங்கத்திற்காக ஒரு சென்ட் நிலத்தையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.

"அரிட்டாப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்களையும் டெல்டா பகுதிகளைப் போல 'சிறப்பு வேளாண் மண்டலம்' மாதிரி 'பாதுகாக்கப்பட்ட உயிரியல் பல்முகத்தன்மை மண்டலமாக' அறிவிக்க வேண்டும்; இதுவே டங்ஸ்டன் சுரங்க பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்," என அன்புமணி கூறினார்.

Advertisment
Advertisement

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடையாது என்றும், மத்திய அரசு மற்றும் வேதாந்தா குழுமத்துடன் தி.மு.க அரசு கைகோர்த்துள்ளது என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 'பாதுகாக்கப்பட்ட உயிரியல் மண்டலம்' அமைக்க கோரி சட்டப்பேரவை முன்பு போராட்டம் நடத்துவேன் என்றும், டங்ஸ்டன் சுரங்கம் நிலத்தை அழிப்பதோடு மன்று, அரிட்டாப்பட்டி மலைக்குன்றில் உள்ள பாரம்பரிய அடையாளத்தையும் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.

அரிட்டாப்பட்டி, 2022ஆம் ஆண்டு 'உயிரியல் பாரம்பரிய மண்டலமாக' அறிவிக்கப்பட்டது என்பதை அன்புமணி நினைவூட்டினார். "நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நிலமற்றவர்களாக ஆகிவிடுவார்கள். மேலும், சுரங்கப் பணிகள் பல நீர்நிலைகள், ஊற்றுகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களை அழித்துவிடும்," என்று அன்புமணி சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் பா.ம.க.,வின் பொதுச் செயலாளர் சு. வடிவேல் ராவணன் மற்றும் பொருளாளர் திலகபாமா ஆகியோரும் பங்கேற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment