ரஷ்யாவால் போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடலூர் மாணவர்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

ரஷ்யாவால் கட்டாயமாக போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த மாணவர் கிஷோரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவால் கட்டாயமாக போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த மாணவர் கிஷோரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss urge central govt to rescue cuddalore student stuck with Russia war Tamil News

ரஷ்யாவால் கட்டாயமாக போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த மாணவர் கிஷோரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவால் கட்டாயமாக போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த மாணவர் கிஷோரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மருத்துவம் படிக்கச் சென்ற இடத்தில் ஆபத்து: ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும்.

Advertisment

ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த  பாளையங்கோட்டை கீழ்ப்பாதியைச் சேர்ந்த  கிஷோர் என்ற மாணவர்,  ரஷ்ய இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைன் நாட்டுடனான போரில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவரது  குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

ரஷ்யாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதி நேர வேலை செய்த போது, தடை செய்யப்பட்ட பொருளை வினியோகம்  செய்ததாக அவரும், சக தமிழ் மாணவர் நித்தீஷ் என்பவரும் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இப்போது  தங்களை  உக்ரைன் போரில் ஈடுபடுத்த அழைத்துச் செல்வதாக பெற்றோருக்கு கிஷோர்  அனுப்பியுள்ள செய்தி தான் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிப்புக்காக ரஷ்யா சென்ற மாணவர்களை  போரில் ஈடுபடுத்த ரஷ்ய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.  வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான பன்னாட்டு  ஒப்பந்தங்களுக்கு இது எதிரானது. ரஷ்யாவின் இந்த செயலால்  பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி, ரஷ்யாவில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின்  பிள்ளைகளை அனுப்பியுள்ள ஆயிரக்கணக்கான பெற்றோரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.

Advertisment
Advertisements

ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்த்து உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியர்கள் 80 பேர்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் கடந்த ஆண்டு மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் உள்ளிட்ட மாணவர்களையும் மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Russia Cuddalore Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: