கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை... பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி; அன்புமணி பெருமிதம்

சென்னை கோவளத்தில் இயங்கி வந்த தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

சென்னை கோவளத்தில் இயங்கி வந்த தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அன்புமணி

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை அன்புமணி பெருமிதம்

சென்னை அருகே கோவளத்தில் இயங்கும் தனியார் ஹெலிகாப்டர் ஜாய் ரைடு சேவை குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜாய் ரைடு சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஜனவரி 15 கூறுகையில், தனியார் ஹெலிகாப்டர் சேவை ஏர் ஆபரேட்டர் அனுமதி பெறாமல் இயக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்ததைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் இந்த தடையை வரவேற்றதோடு இது தனது கட்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஹெலிகாப்டர் ரைடு குறித்து செந்தில் பாலாஜி அளித்த புகார் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி இந்த சேவையை ரத்து செய்யக் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோரி வந்ததாகவும், கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியதாகவும், செப்டம்பரில் ஒரு அறிக்கையும் வெளியிட்டதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் சேவைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், கிழக்கு கடற்கரை சாலையை (ஈ.சி.ஆர்) பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழ்விடமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், சேவையின் மீதான தடைக்கு திரு.அன்புமணி தேவையற்ற பெருமை எடுத்துக்கொள்வதாக திரு பாலாஜி குற்றம் சாட்டினார்.

Chennai Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: