scorecardresearch

20 மொழிகளில் தயாராகும் ‘மணிமேகலை’: பௌத்த தமிழ் காப்பியத்திற்கு கிடைத்த பெருமை

மணிமேகலை, ஆரம்பகால தமிழ் காவியமான ‘சிலப்பதிகாரத்தின்’ தொடர்ச்சி, இது சீத்தலை சாத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது.

Tamil Epic Manimekalai
Ancient Tamil Epic Manimekalai to be translated into 20 languages

விரைவில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த பௌத்த அறிஞர்கள், பழங்கால தமிழ்-பௌத்த காவியமான ‘மணிமேகலை’யை தங்கள் சொந்த மொழிகளில் வாசிப்பார்கள்.

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, மலாய், சீனம், ஜப்பானியம், மங்கோலியன், வியட்நாம், பர்மா, தாய், கொரியன் மற்றும் சிங்களம் உள்ளிட்ட 20 மொழிகளில் செம்மொழித் தமிழின் மத்திய நிறுவனத்தால் (CICT), வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் மொழிபெயர்க்கப்படும்.

மணிமேகலை, ஆரம்பகால தமிழ் காவியமான ‘சிலப்பதிகாரத்தின்’ தொடர்ச்சி, இது சீத்தலை சாத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது. இது சிறைச்சாலைகள் மற்றும் விபச்சாரத்தை ஒழித்தல், தடை, பசியை ஒழித்தல் போன்ற பல சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், பௌத்தம் ஆதிக்கம் செலுத்தும் 10 மொழிகளின் மொழிபெயர்ப்பை வெளியிட செம்மொழித் தமிழின் மத்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. நாடுகள் பௌத்தத்தின் தத்துவங்களை பாலி மொழியில் இருந்து எடுத்தன. இருப்பினும், இந்த நாடுகளில் பண்டைய பௌத்த இலக்கியங்கள் இல்லை. தமிழ் மொழியில் மட்டுமே பண்டைய பௌத்த காவியமான ‘மணிமேகலை’ உள்ளது” என்று CICT இன் இயக்குனர் ஆர் சந்திரசேகரன் கூறினார்.

சமீபத்தில், ‘மணிமேகலை’யின் முக்கியத்துவம் குறித்து தலாய் லாமா பேசினார். “பௌத்த தத்துவங்களைப் பற்றி பேசும் ஒரே பழங்கால இலக்கியம் இதுதான். வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இந்த படைப்பின் மூலம் பண்டைய தமிழ் கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

முதற்கட்டமாக சிங்களம், மங்கோலியன், தாய், கொரியன், ஜப்பான், மலாய், பர்மா, வியட்நாம், மொரிஷியன் கிரியோல் உள்ளிட்ட 10 உலக மொழிகளில் தமிழ் உரை மொழிபெயர்க்கப்படும்.

‘திருக்குறள்’க்குப் பிறகு, பரவலாக மொழிபெயர்க்கப்படும் இலக்கியமாக மணிமேகலை’ இருக்கும்.

மத்திய நிறுவனம் சமீபத்தில் ‘மணிமேகலை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது. இந்த பதிப்பு ஏற்கனவே பிரபலமாகி வருகிறது. மேலும், சங்க இலக்கியங்களை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க செம்மொழித் தமிழின் மத்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவற்றை மொழிபெயர்த்து முடித்துள்ளோம். அவை மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும்” என்று சந்திரசேகரன் மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ancient tamil epic manimekalai to be translated into 20 languages