புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனைக்கு வந்த அய்யன்னா நகரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸில் செவிலியர் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் அனுப்பியதால் காக்கிநாடா செல்லும் வழியிலேயே ஸ்ரீனிவாஸ் உயிரிழந்துள்ளார்.
ஏனாம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஸ்ரீனிவாஸ் உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன்