Advertisment

வீட்டில் மயங்கி விழுந்த மா. சுப்பிரமணியன்: கிண்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை

சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
express photo

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழக்கம் போல் உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

அங்கு தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

Advertisment

தொடர்ந்து அவரை சென்னை கிண்டில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் அவருக்கு இதயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மா. சுப்பிரமணியன் மதியம் 2 மணிக்கு மேல் வீடு திரும்பினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மா. சுப்பிரமணியன் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். மா. சுப்பிரமணியன் பல்வேறு தடகள போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment