Advertisment

தமிழ்நாட்டின் 21 நகரங்களில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்; புதிய ஆய்வு

சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 21 நகரங்களில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்; புதிய ஆய்வில் தகவல்; பசுமை பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டம்

author-image
WebDesk
New Update
 Heat wave Orange alert for 7 districts in TN till may 6 Tamil News

தமிழ்நாட்டின் 21 நகரங்களில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்; புதிய ஆய்வில் தகவல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை, தாம்பரம், ஆவடி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 21 நகரங்களில் 2050க்கு முன் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என காலநிலை மாற்றம் குறித்த அண்ணா பல்கலைக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது. 

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (CCCDM) தயாரித்த, 'தமிழ்நாட்டின் காலநிலை இடர் மதிப்பீடு மற்றும் தழுவல் திட்டம் - நிலையான வாழ்விடம்' (1990-2020) என்ற வரைவு அறிக்கையின்படி, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும், வடக்கு கடலோரப் பகுதிகள், நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அறிக்கை வெப்பநிலை நாட்களை அதிகரிப்பது தொடர்பான போக்கைக் குறிக்கிறது, அதாவது 2050 ஆண்டுகளின்போது வருடத்திற்கு 250 நாட்கள் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும். சென்னை மாநகராட்சி போன்ற வட கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் ஆவடி, தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிக அளவு காலநிலை அபாயங்களுக்கு உள்ளாகின்றன என்பதை நகர காலநிலை அபாய மதிப்பீடு எடுத்துக்காட்டுகிறது. திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, சிவகாசி, திண்டுக்கல், நாகர்கோவில், காஞ்சிபுரம், தூத்துக்குடி, கடலூர் மற்றும் சேலம் ஆகியவை காலநிலை மாற்றத்தால் மிதமான அபாயத்தில் உள்ளன, கரூர், திருப்பூர், ஓசூர், கோவை, ஈரோடு மற்றும் வேலூர் ஆகியவை குறைந்த அபாயத்தை எதிர்கொள்கின்றன, என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரமான நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு மற்றும் உச்ச வெப்பநிலை ஆகியவை நகர்ப்புறங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று ஆய்வு கூறுகிறது, சென்னை, நாகர்கோவில், தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி 1985-2014 ஆம் ஆண்டில் சராசரியாக ஆண்டுக்கு 40 நாட்களுக்கு மேல் வெப்ப அலைகளை அனுபவித்ததாக அறிக்கை கூறுகிறது. ஆனால் அடுத்த நூற்றாண்டில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

அதிகபட்ச வெப்பநிலை சாதாரண வெப்பநிலையை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால், இந்திய வானிலை ஆய்வு மையம் அதை வெப்ப அலை என்று அழைக்கிறது.

சென்னையில் ஆண்டு சராசரி வெப்ப அலை நாட்கள் 42 நாட்களில் இருந்து 81 நாட்களாக அதிகரிக்கும். அதேபோல், ஆவடி மற்றும் தாம்பரத்தில் ஆண்டு சராசரி வெப்ப அலை நாட்கள் முறையே 43 மற்றும் 42 நாட்களில் இருந்து 80 மற்றும் 78 நாட்களாக அதிகரிக்கும். 39 வெப்ப அலை நாட்களைக் கொண்ட காஞ்சிபுரத்தில் 2050 ஆம் ஆண்டுக்குள் 74 வெப்ப அலை நாட்கள் இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அதிக வெப்ப அலைகளை எதிர்கொள்ளும் அனைத்து 21 நகரங்களிலும், சென்னைதான் அதிகம் பாதிக்கப்படும். ஒட்டுமொத்த பாதிப்பு மதிப்பீட்டின்படி, அதிக மக்கள்தொகை அடர்த்தி மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட வீடற்ற மக்கள் கொண்ட சென்னை, தமிழ்நாட்டின் மிகவும் பாதிக்கப்படும் நகரமாக உள்ளது. மோசமான உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார காரணிகள் இந்த குழுக்களை வெப்ப அழுத்தம் மற்றும் தொடர்புடைய நோய்களுக்கு மிகவும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது, என்று அறிக்கை கூறுகிறது.

2014 ஆம் ஆண்டு நகர்ப்புற பசுமை வழிகாட்டுதல்களின்படி, 21 நகரங்களில் சென்னையில் 62 சதுர கி.மீ பரப்பளவில் பசுமைப் பற்றாக்குறை உள்ளது என்றும், இது அதிக வெப்ப அலை நாட்கள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது என்றும் ஆய்வு கூறுகிறது. மொத்தப் பரப்பளவு சுமார் 438 சதுர கி.மீட்டரில், பரிந்துரைக்கப்பட்ட 79 சதுர கி.மீ.க்கு பதிலாக 8 சதுர கி.மீ பசுமை பரப்பை மட்டுமே சென்னை கொண்டுள்ளது. மேலும், 9 சதுர கி.மீ., கூடுதல் பசுமைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூரில் பரிந்துரைக்கப்பட்ட 60 சதுர கி.மீ.க்கு பதிலாக 7 சதுர கி.மீ பசுமை பரப்பு மட்டுமே உள்ளது. கோவையில் 13 சதுர கி.மீ கூடுதல் சாத்தியம் உள்ளது. ஆனால் 40 சதுர கிமீ பற்றாக்குறை உள்ளது. மறுபுறம், ஆவடியில் 5 சதுர கிலோமீட்டர் பற்றாக்குறை உள்ளது.

சுவாரஸ்யமாக, காஞ்சிபுரம் மற்றும் தாம்பரம் மற்றும் நாகர்கோவிலில் பற்றாக்குறை உள்ளது. நகர்ப்புற பசுமைப்படுத்தல் வழிகாட்டுதல்களின் கீழ், நடுத்தர நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் மொத்த வளர்ச்சியடைந்த பகுதிக்கு பூங்காக்கள், திறந்தவெளிகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளின் விகிதம் 18-20% ஆக இருக்க வேண்டும் என்று நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைக்கிறது. பெருநகரங்களில், இந்த விகிதம் 20-25% ஆக இருக்க வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், பசுமை பரப்பு குறைவாக உள்ள நகரங்களில் பசுமையை மேம்படுத்துவது இன்றியமையாதது. வருங்காலத்தில் பெருகிவரும் மக்கள்தொகையின் காரணமாக பரிந்துரைக்கப்பட்ட பசுமை பரப்பை விட அதிகமாக உள்ள நகரங்கள் மேலும் சீரழிவு இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நகர்ப்புற காடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றாலும், நகர்ப்புற வன மேலாண்மைக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முடிவுகள் ஊகித்துள்ளன, என்று அறிக்கை கூறுகிறது.

மறுபுறம், அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் வெப்ப அலையானது, சமவெப்பநிலை (ஆண்டு முழுவதும் வெப்பநிலை மாறுபடும் அளவு) குறைவதால் தாவரங்கள் மற்றும் பல்லுயிர் வளர்ச்சியை பாதிக்கும். 1985-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் நகரங்களில் சமவெப்பநிலை 51 முதல் 67 வரை இருந்தது, இது 2050 ஆம் ஆண்டில் 48-65 ஆகக் குறையும். சமவெப்பநிலை குறைவதால் நகரங்களுக்குள் அதிக பகல்நேர வெப்பநிலை ஏற்படும். உயர்ந்த வெப்பநிலை காற்று மாசுபாட்டை மோசமாக்குகிறது. வளிமண்டலத்தில் ஏற்படும் இரசாயன எதிர்வினைகள் புகைமூட்டம் உருவாக்கம் மற்றும் தரைமட்ட ஓசோனை அதிகரிக்கிறது, என்று அறிக்கை கூறுகிறது.

”தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையானது நகரங்களில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்ப்புற பசுமையாக்கும் கொள்கையை உருவாக்கி வருகிறது. நகர்ப்புற பூங்காக்கள், குடியிருப்பு பூங்காக்கள், செங்குத்து தோட்டங்கள், தொழில்துறை பகுதிகளைச் சுற்றி பசுமையான பகுதிகள் ஆகியவற்றின் மூலம் நகரத்தை பசுமையாக்கும் பல்வேறு அம்சங்களை முழு தமிழகத்திற்கும் விரிவாக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்" என்று மூத்த சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், பசுமையாக்குதல் குறித்த நகர்ப்புற கொள்கை பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இதனைச் செயல்படுத்துவதற்காக, தாவரவியலாளர்கள், தோட்டக்கலை வல்லுநர்கள், இயற்கைக் கட்டிடக்கலை வல்லுநர்கள் மற்றும் பிறர் கொண்ட ஒரு பிரத்யேக பிரிவு நகரங்கள் மற்றும் பெருநிறுவனங்களில் இருக்கும், என்றும் அந்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

heat Chennai Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment