பா.ம.க முடிவால் 60 ஆண்டுகளாக ஆளும் கட்சிகளுக்கு மாற்றாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுடன் பா.ம.க இணைந்து கூட்டணி அமைந்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி பேசுகையில் ” 10 ஆண்டுகளாக பா.ம.க தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து வருகிறது. வருகின்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுடன் இணைந்து செயல்பட உள்ளோம். நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடி நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவுக்கு பிறகு 60 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் நிலவுகிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான், இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3 வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார்” என்று அவர் கூறினார்.
அண்ணாமலை பேசுகையில், “ மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கு அதிகமான சீட்களில் வெற்றிபெற வேண்டும் என நோக்கத்துடன் பா.ம.க களமிறங்கி இருக்கிறது. தமிழத்தின், இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் தலைவராக திகழும் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்களின் அன்பை பெற்றவர் ராமதாஸ். தமிழகத்தில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது பெரும் கனவு. பா.ம.க முடிவால் 60 ஆண்டுகளாக ஆளும் கட்சிகளுக்கு மாற்றாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.
ராமதாஸ் யோசிக்கும் முக்கிய விஷயங்களை மோடி செயல்படுத்தி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் மக்கள் வெற்றியை கொடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். பா.ம.க எடுத்துகொள்ள இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலும் மாற்றிவிடும்.
2024ல் மாபெரும் வெற்றி, 2026-ம் ஆண்டு மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் .நள்ளிரவில். கோவையிலிருந்து இங்கே வந்ததற்கு ,காரணமே பிரதமர் ,மோடியிடன் ராம்தாஸை அமரவைத்து அழகு பார்க்கத்தான் “ என்று தெரிவித்துள்ளார்.