சென்னையில் காவலர் மீது தாக்குதல்: தி.மு.க-வினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? - அண்ணாமலை கடும் கண்டனம்

"காவலர் காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த தி.மு.க-வினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.காவல்துறையினரை தாக்கும் அளவுக்க தி.மு.கவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

"காவலர் காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த தி.மு.க-வினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.காவல்துறையினரை தாக்கும் அளவுக்க தி.மு.கவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai BJP Leader condemn chennai traffic police attacked by DMK cadres Tamil News

"காவலர் காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த தி.மு.க-வினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.காவல்துறையினரை தாக்கும் அளவுக்க தி.மு.கவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை 117-வது வார்டு தி.மு.க சார்பில் வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற இருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை காவலர் காமராஜ் ஓரமாக போக சொன்னதாக தெரிகிறது. இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  தனது சமூக வலைதள பக்கத்தில், "சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

காவல்துறையினரை தாக்கும் அளவுக்க தி.மு.கவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?" என்று  அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். 

Advertisment
Advertisements

Chennai Dmk Bjp Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: