/tamil-ie/media/media_files/uploads/2022/11/download-76.jpg)
பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமராக மோடி பதவியேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்தை பதிவிட்டார்.
இதுதொடர்பாக அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முன்வரவில்லை. இதனால் விசிக கட்சியின் வழக்கறிஞர் காசி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.