Advertisment

"நானா நானி" முதியோர் குடியிருப்புக்கு சென்ற அண்ணாமலை: கண் கலங்கி ஆசீர்வாதம் பெற்று நெகிழ்ச்சி

முதியோர்கள் முன் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்ற அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Annamalai b.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை, கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை அங்கு உள்ள "நானா நானி" முதியோர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றார்.

Advertisment

 Annamalai b1.png

அப்போது அவர்களுடன் பேசிய அண்ணாமலை தன்னையும் அறியாமல் கண் கலங்கினார். அங்கு இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக அங்கிருந்தவர்கள் அண்ணாமலைக்கு மாலை அணிவித்தும் பூரண கும்ப மரியாதை வழங்கியும் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.  

 Annama b2.png

பின்னர் அங்கிருந்த முதியோர்களிடம் பேசிய அண்ணாமலை, நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்களிடம் ஆசி பெற வந்து உள்ளேன் என்று கூறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினார். அவரது தலையில் கை வைத்து அனைவரும் ஆசிர்வாதம் செய்து மலர்கள் தூவினர்.   

 Annama b3.png

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment