நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பெரியாரை பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி வருகிறார். குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தொடர்ச்சியாகவே பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் மீண்டும் பெரியார் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் எப்போதும் பெரியாரை எதிர்க்கத் தான் செய்வேன். நீங்கள் வேண்டுமானால் கொண்டாடுங்க ஏத்துக்கோங்க.ஆனால் நான் எப்போதும் எதிர்ப்பேன்.
பெரியார் என்பவர் எங்களுக்கு தேவையில்லை.எனக்கு தேவையில்லை.என்னை பின்பற்றும் பிள்ளைகள் பெரியார் தான் வேண்டும் என்றால் தாராளமாக வெளியேறி போகலாம். சும்மா பெரியார் பெரியார் என்று சொல்லக்கூடாது. திமுகவில் இருப்பவர்கள் பெரியாரை கொண்டாடுவதைவிட்டு விட்டு காந்தியை கொண்டாடுங்கள். எனக்கு தமிழ் மொழி தான் உயிரில். நான் பெரியாரை எதிர்ப்பதற்கு காரணம் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி, முட்டாள்கள் மொழி என்று கூறியவர் பெரியார். எனவே, அப்படி பேசுபவர்களை ஒலிப்பது தான் என்னுடைய இலக்கு.
பெரியாரை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார் என்று யார் சொன்னா? நான் அந்த நாட்டில் வளர்ந்தவன். சுபாஷ் சந்திரபோஸ் படம் எம்ஜிஆர் படம் தான் அவருடைய வீட்டில் இருந்தது. என்னுடைய அண்ணன் எப்போதும் பெரியாரை பற்றி பேசினார் ? விடுதலை புலிகளை சாகவேண்டும் என்று நினைத்தது திராவிடம் தான்” எனவும் பேசினார்.
இதற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, "சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டாரோ?" என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களை சந்தித்த சீமான், ” பெரியார் குறித்து நான் இப்போதுதான் பேசத்தொடங்கியுள்ளேன். அதற்குள்ளாகவே ஓவராக பேசுகிறேன் என்றால் எப்படி? என பதில் அளித்தார்.
ஓவராக பேசிவிட்டேனா? அண்ணாமலை கருத்துக்கு சீமான் பதிலடி
சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டாரோ என்ற அண்ணாமலையின் கருத்துக்கு, 'பெரியார் குறித்து இப்போதுதான் பேசத்தொடங்கியுள்ளேன். அதற்குள்ளாகவே ஓவராக பேசுகிறேன் என்றால் எப்படி?' என்று சீமான் பதில் அளித்துள்ளார்.
சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டாரோ என்ற அண்ணாமலையின் கருத்துக்கு, 'பெரியார் குறித்து இப்போதுதான் பேசத்தொடங்கியுள்ளேன். அதற்குள்ளாகவே ஓவராக பேசுகிறேன் என்றால் எப்படி?' என்று சீமான் பதில் அளித்துள்ளார்.
அண்ணாமலையின்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பெரியாரை பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி வருகிறார். குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தொடர்ச்சியாகவே பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் மீண்டும் பெரியார் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் எப்போதும் பெரியாரை எதிர்க்கத் தான் செய்வேன். நீங்கள் வேண்டுமானால் கொண்டாடுங்க ஏத்துக்கோங்க.ஆனால் நான் எப்போதும் எதிர்ப்பேன்.
பெரியார் என்பவர் எங்களுக்கு தேவையில்லை.எனக்கு தேவையில்லை.என்னை பின்பற்றும் பிள்ளைகள் பெரியார் தான் வேண்டும் என்றால் தாராளமாக வெளியேறி போகலாம். சும்மா பெரியார் பெரியார் என்று சொல்லக்கூடாது. திமுகவில் இருப்பவர்கள் பெரியாரை கொண்டாடுவதைவிட்டு விட்டு காந்தியை கொண்டாடுங்கள். எனக்கு தமிழ் மொழி தான் உயிரில். நான் பெரியாரை எதிர்ப்பதற்கு காரணம் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி, முட்டாள்கள் மொழி என்று கூறியவர் பெரியார். எனவே, அப்படி பேசுபவர்களை ஒலிப்பது தான் என்னுடைய இலக்கு.
பெரியாரை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார் என்று யார் சொன்னா? நான் அந்த நாட்டில் வளர்ந்தவன். சுபாஷ் சந்திரபோஸ் படம் எம்ஜிஆர் படம் தான் அவருடைய வீட்டில் இருந்தது. என்னுடைய அண்ணன் எப்போதும் பெரியாரை பற்றி பேசினார் ? விடுதலை புலிகளை சாகவேண்டும் என்று நினைத்தது திராவிடம் தான்” எனவும் பேசினார்.
இதற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, "சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டாரோ?" என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களை சந்தித்த சீமான், ” பெரியார் குறித்து நான் இப்போதுதான் பேசத்தொடங்கியுள்ளேன். அதற்குள்ளாகவே ஓவராக பேசுகிறேன் என்றால் எப்படி? என பதில் அளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.