Advertisment

உலக யோகா போட்டியில் வெற்றி பெற்ற கோவை சிறுமி; விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து கூறிய அண்ணாமலை

டெல்லியில் நடைபெற்ற உலக யோகா போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய சிறுமி சமந்தாவை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Annamala cbe.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியை  சேர்ந்தவர் 8 வயதான சிறுமி சமந்தா மீனாட்சி. அதே பகுதியில் உள்ள அன்னை மெட்ரிக் பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வரும் சமந்தா சிறு வயது முதலே யோகாவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். 

Advertisment

இந்நிலையில் டெல்லி காசியாபாத் நகரில் அண்மையில் யு.ஒய்.எஸ்.எஃப். வேர்ல்டு கப் யோகா எனும் யோகா போட்டிகள் நடைபெற்றன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். 

ஜூனியர் பிரிவு தனி பிரிவில் கலந்து கொண்ட சமந்தா மீனாட்சி 3-ம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில், கோவை விமான நிலையம் திரும்பிய சிறுமிக்கு அவரது பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி உட்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் விமான நிலையம் வந்தததால் சிறுமியின் சாதனையை அறிந்து சமந்தாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இதே போல சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Advertisment
Advertisement

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment