Advertisment

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அண்ணாமலை: மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தார்.

author-image
WebDesk
Jun 01, 2023 18:10 IST
Annamalai Darshan at Thoothukudi Panimaya Matha Temple

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அண்ணாமலை பிராரத்தனை செய்தார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, கட்சி நிர்வாகி வீட்டின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்கு சென்றார்.

Advertisment

அப்போது, தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை நடத்தினார்.

மேலும் அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினார். அப்போது பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சித்தாரங்கன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அண்ணாமலை கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்துக்கு அண்ணாமலை சென்றபோது அவரை அங்கு பங்குதந்தை குமாரராஜா வரவேற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tuticorin #Bjp #Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment