பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தி.மு.க அரசு தோல்வி; அமைச்சர் அன்பில் மகேஸ் பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்

“பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தி.மு.க அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்துவிட்டது. உடனடியாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஸ் விலக வேண்டும்” என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
annamalai anbil mahesh

“பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தி.மு.க அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்துவிட்டது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

“பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தி.மு.க அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்துவிட்டது. உடனடியாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஸ் விலக வேண்டும்” என  பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

Advertisment
Advertisements

பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், தி.மு.க அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை. 

உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: