பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, இனிமேல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கடந்த ஜூன் மாதம் கூறிய நிலையில், திடீரென டெல்லி செல்லும் அண்ணாமலையிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, “செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேசமாட்டேன், முயற்சி செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, பா.ஜ.க தலைமை அழைத்ததன் பேரில் அண்ணாமலை டெல்லி செல்வதாக தகவல் வெளியாயனது. இதையடுத்து, செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகத்தினர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கருத்து கேட்பதற்காக சென்னை விமான நிலையம் சென்றனர். அப்போது, செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேசமாட்டேன், முயற்சி செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
இதனிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், ஆளுநர் ஆர்.என். ரவியும் ஒரே நேரத்தில் டெல்லி பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, இனிமேல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“